ஞாயிறு, 23 நவம்பர், 2014

ஏரல் அருகே ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் உள்பட இருவரை வெள்ளம் அடித்துச்சென்றது

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இருவரையும் மீட்பதற்காக தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை தூத்துக்குடி பிரையன்ட்நகர் 7வது தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் பிரபிஸ் (21) என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பிரபிஸ் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன், பிச்சையா ஆகியோரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதை பார்த்த வாழவல்லான் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். இதில் கண்ணன், பிச்சையா இருவரும் மீட்கப்பட்டனர். ஆனால், பிரபிஸ் மட்டும் கிடைக்கவில்லை.
பிரபிஸை மீட்கும் பணி யில் ஈடுபட்ட வாழவல் லான் தெற்கூரை சேர்ந்த மாவலிராஜா (45) என்பவரும் தண்ணீரில் அடித் துச் செல்லப்பட்டார். இருவரது கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் ஸ்ரீவைகுண் டம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை எஸ்.பி. துரை, ஸ்ரீவைகுண் டம� டிஎஸ்பி ராஜமன்னார், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ. மந்திரமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பிரபிஸ் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படிக்கிறார்.
மாவலிராஜா ஏரல்& சென்னை இடையே இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்சில் கிளீனராக வேலை பார்க்கிறார்.
தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல்
ஏரல் அருகே வாழவல்லானில் தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்த தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரபிஸ் உள்பட இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...