ஏரல் அருகே சக்கம்மாள்புரத்தில் தொடர்மழை காரணமாக முருங்கை மரங்களில் இலைகள் உதிர்ந்து மொட்டையாக உள்ளன.
முருங்கை மரங்கள் பாதிப்பு
ஏரல், டிச.1:
தொடர்மழையினால் ஏரல் பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள முருங்கை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வருமானத்தை பெருக்க ஊடு பயிராக புடலங்காய் பயிர் செய்துவருகின்றனர்.
ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, வலசக்காரன்விளை, திருப்பணிசெட்டிக்குளம், நட்டாத்தி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முருங்கை பயிர் செய்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு ரூ14 ஆயிரம் வரை கட்டுக்குத்தகைக்கு எடுத்து விவசாயிகள் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் முருங்கை தரம் பிரித்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை உள் ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் பிறமாநிலங்களுக் கும் முருங்கை காய்கள் வியாபாரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இத்தொழிலை நம்பி இப்பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழை பயிர் செய்துவந்தவர்கள் வாழையில் தற்போது போதிய வருமானம் கிடைக்காததால் முருங்கை பயிருக்கு மாறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வருடம் நல்ல மழை பெய்து வருவதால் ஏரல் பகுதிகளில் முருங்கை மரங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் முருங்கை மரம் இலைகளை உதிர்ப் ப தும், அதிக அளவு நோய் தாக்கபட்டு வருவதாலும் இப்பகுதியில் பயிர் செய் துள்ள முருங்கை மரங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன.
மேலும் முருங்கை மரத் தில் கிடைக்ககூடிய ஒரு சில காய்களும் பிசு, பிசுப்பு உண்டாகி கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அந்த முருங்கை காய் களை மரத்திலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர். மழை காலத்தில் போதிய வரு மானம் முருங்கையில் கிடைக்காததால் ஊடு பயிராக புடலங்காய் விதை களை ஊன்றியுள்ளனர். முருங்கை மரங்களை வெட்டி சாய்த்து அதில் புடலங்காய் கொடிகளை படரவிட்டுள்ளனர்.
ஏரல் பகுதியில் தொடர் மழையால்
விவசாயிகள் கவலை
பயிர் கடன் வசதி செய்யப்படுமா?
இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறுகையில்; இப்பகுதியில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்துவந்தனர். தற்போது நோய் தாக்குதல் மற்றும் கூடுதல் செலவு செய்து வாழை வளர்த்து வந்தாலும் போதிய வருமானம் இல்லாததினால் முருங்கை பயிர்செய்ய மாறிவருகின்றனர். இதுவும் அனைத்து இடங்களிலும் நல்ல சீசன் நேரத்தில் முருங்கை காய்கள் அதிக அளவு காய்த்துவிடுவதால் விலை குறைவாக செல்கிறது. தற்போது முருங்கை காய்கள் நல்ல விலைக்கு செல்லும் போது விவசாயிகளிடம் முருங்கை காய் இல்லாமல் போய்விடுகிறது. கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் அனைத்து முருங்கை மரங்களும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியில் முருங்கை விவசாயிகளை காப்பாற்ற விவசாயிகளுக்கு மானியத்தில் உரம் மற்றும் பயிர் கடன் வசதி செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக