சனி, 29 நவம்பர், 2014

ஆத்தூர்-முக்காணி மேம்பாலத்தில் மின்விளக்குகள்

ஆத்தூர்-முக்காணி மேம்பாலத்தில் ரூ. 10 லட்சத்தில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.
ஆத்தூரில் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் முருகானந்தம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் வீ.சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
பழைய கிராமத்தில் வடிகால் பழுது சரிசெய்தல், கீழரதவீதி சந்து, சேனையர் தெரு மற்றும் புன்னக்காயல் ரோடு ரைஸ்மில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், வடக்குரதவீதி செக்கடி தெருவில் சாக்கடை பாலம் அமைத்தல் போன்ற பணிகள் பொது நிதியில் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தலைவர் பேசியது, பேரூராட்சிகளின் இயக்குநரின் அறிவுரையின்படி ஒவ்வொரு புதன்கிழமையும் அம்மா மக்கள் சேவை மையம் இயங்கி வருகிறது பொதுமக்கள் பேரூராட்சி பகுதிகளில் உள்ள சேவைகளை மனுக்கள் அளித்து பயன்பெறலாம். ரூ. 15 லட்சம் செலவில் பேரூராட்சி மன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட உள்ளது.
ஆத்தூர்-முக்காணி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ரூ. 10 லட்சத்தில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.
மழைநீர் தேங்காமல் வடிவதற்கு யாதவர் தெரு, மரக்கடை தெரு, வடக்கு ரத வீதி, புன்னக்காயல் ரோடு, பெரிய தெரு, தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோயில் தெரு, முதல் சந்தித் தெரு மற்றும் மேல முடுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ. 47 லட்சத்தில் வடிகாலினை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் ராஜகோபால், ஆறுமுகம், கிருஷ்ணகுமார், கிருபாகரன், ஆத்திக்கனி, மாரியப்பன், சீனிவாசன், செüகர்ஜான், அமீர் அம்சா, சாகிதா, இளநிலை உதவியாளர் த.ஜோதிபாஸ், வரிவசூலர்கள் சிவசுப்பிரமணியன், மு.சுடலைமுத்து, மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ப.நாராயணன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...