ஏரல்
ஏரல் அருகே தரைமட்ட ஆற்று பாலத்தின் மீது மோட்டார்சைக்கிளுடன் நடந்து சென்றவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. பொதுமக்களின் முயற்சியால் அவர் கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்டார்.
கூலித்தொழிலாளிதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை பங்களாவைச் சேர்ந்தவர், ஜெயபால் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரல் தாமிரபரணி ஆற்றில் தரைமட்ட தாம்போதி பாலத்தின் மீது வெள்ளம் சென்று கொண்டு இருக்கிறது. பாலத்தின் அருகே வந்த ஜெயபால், மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்லாமல் தள்ளிக் கொண்டே சென்றதாக தெரிகிறது. திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் ஜெயபாலை வெள்ளம் இழுத்துச் சென்றது. ஆனால், அவர் உடைமரத்தை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
பத்திரமாக மீட்புஇதை பார்த்து அக்கம்பக்கத்தினர் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து ஏரல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்தனர்.
இதற்கிடையே அங்கு நின்று கொண்டு இருந்த ராஜபதி ஊரைச் சேர்ந்த பூபதி என்பவர் துணிச்சலாக தண்ணீரில் நீந்திச் சென்று, கயிறு மூலம் ஜெயபாலை மீட்க முயற்சித்தார். நீண்ட போராட்டத்துக்கு பின்பு ஜெயபால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
ஏரல் அருகே தரைமட்ட ஆற்று பாலத்தின் மீது மோட்டார்சைக்கிளுடன் நடந்து சென்றவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. பொதுமக்களின் முயற்சியால் அவர் கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்டார்.
கூலித்தொழிலாளிதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை பங்களாவைச் சேர்ந்தவர், ஜெயபால் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரல் தாமிரபரணி ஆற்றில் தரைமட்ட தாம்போதி பாலத்தின் மீது வெள்ளம் சென்று கொண்டு இருக்கிறது. பாலத்தின் அருகே வந்த ஜெயபால், மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்லாமல் தள்ளிக் கொண்டே சென்றதாக தெரிகிறது. திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் ஜெயபாலை வெள்ளம் இழுத்துச் சென்றது. ஆனால், அவர் உடைமரத்தை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
பத்திரமாக மீட்புஇதை பார்த்து அக்கம்பக்கத்தினர் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து ஏரல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்தனர்.
இதற்கிடையே அங்கு நின்று கொண்டு இருந்த ராஜபதி ஊரைச் சேர்ந்த பூபதி என்பவர் துணிச்சலாக தண்ணீரில் நீந்திச் சென்று, கயிறு மூலம் ஜெயபாலை மீட்க முயற்சித்தார். நீண்ட போராட்டத்துக்கு பின்பு ஜெயபால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக