ஏரல்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலத்தை மூழ்கடித்ததுநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையை தாண்டி, தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது.
ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் நேற்று காலை 8 மணியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. ஏற்கனவே தரைமட்ட பாலத்தின் நடுவில் ஓட்டை விழுந்தது. அதனை சிமெண்டு கலவையால் அடைத்து இருந்தனர். தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் அந்த இடத்தில் ஓட்டை விழுந்தது.
போக்குவரத்து பாதிப்புஉடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி, மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்றனர். தரைமட்ட பாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக இருபுறமும் கயிறு கட்டி சாலை மறிக்கப்பட்டது. இதனால் ஏரல்– குரும்பூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏரலில் இருந்து ஆத்தூர் வழியாக குரும்பூருக்கு வாகனங்கள் சென்றன. சில வாகனங்கள் ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி, ஆழ்வார்தோப்பு வழியாக குரும்பூருக்கு சென்றன. ஏரலில் இருந்து குரும்பூர், நாசரேத் போன்ற பகுதிகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் சுற்றி சென்றதால் அவதி அடைந்தனர்.
புதிய பாலத்தை திறக்க கோரிக்கைஏரல் தாமிரபரணி ஆற்றின் இடையே பல கோடி ரூபாய் செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
புதிய உயர்மட்ட பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தெற்கு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இணைப்புச் சாலை அமைக்க அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு சுமார் 1½ ஆண்டுக்கு மேலாகியும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. தற்போது புதிய உயர்மட்ட பாலத்தின் நடுவில் உடை மரங்கள் முளைத்து சிதிலம் அடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் புதிய உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலத்தை மூழ்கடித்ததுநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையை தாண்டி, தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது.
ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் நேற்று காலை 8 மணியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. ஏற்கனவே தரைமட்ட பாலத்தின் நடுவில் ஓட்டை விழுந்தது. அதனை சிமெண்டு கலவையால் அடைத்து இருந்தனர். தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் அந்த இடத்தில் ஓட்டை விழுந்தது.
போக்குவரத்து பாதிப்புஉடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி, மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்றனர். தரைமட்ட பாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக இருபுறமும் கயிறு கட்டி சாலை மறிக்கப்பட்டது. இதனால் ஏரல்– குரும்பூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏரலில் இருந்து ஆத்தூர் வழியாக குரும்பூருக்கு வாகனங்கள் சென்றன. சில வாகனங்கள் ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி, ஆழ்வார்தோப்பு வழியாக குரும்பூருக்கு சென்றன. ஏரலில் இருந்து குரும்பூர், நாசரேத் போன்ற பகுதிகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் சுற்றி சென்றதால் அவதி அடைந்தனர்.
புதிய பாலத்தை திறக்க கோரிக்கைஏரல் தாமிரபரணி ஆற்றின் இடையே பல கோடி ரூபாய் செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
புதிய உயர்மட்ட பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தெற்கு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இணைப்புச் சாலை அமைக்க அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு சுமார் 1½ ஆண்டுக்கு மேலாகியும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. தற்போது புதிய உயர்மட்ட பாலத்தின் நடுவில் உடை மரங்கள் முளைத்து சிதிலம் அடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் புதிய உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக