வியாழன், 12 மார்ச், 2015

ஏரல் அருகே பிளஸ் 2 மாணவர் தற்கொலை

ஏரல் அருகே
பிளஸ் 2 மாணவர் தற்கொலை
ஏரல், மார்ச் 12:
ஏரல் அருகே தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ் 2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரல் அருகே அரியபுரம் வேளாளர் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஏரல் அரசு மருத்துவமனையில் சுகாதார மேற்பார்வையாளராக உள்ளார். இவரது மனைவி ஜெயா. இவருக்கு ஒரு மகளும், ராம் என்ற ராம்ஜீ (17), லெட்சுமணன்(17) ஆகிய 2 மகன்களும் உள்ள னர். ராம், லெட்சுமணன் ஆகியோர் வாழவல்லான் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று முன்தினம் ஆங்கில தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த ராம், தேர்வு சரியாக எழுதாததால் வீட்டில் யாரிடமும் சரியாக பேசாத நிலையில் இருந்தார். இரவு வீட்டில் அனைவரும் சாமி தரிசனம் சென்றனர். ஆனால் ராம் போகவில்லை. இந்நிலை யில் வீட்டு மாடியில் உள்ள அறையில் ராம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏரல் போலீசில் புகார் செய்யப்பட்டதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...