ஞாயிறு, 22 மார்ச், 2015

மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் கனிமொழி எம்.பி

நெல்லையில் தற்கொலை செய்த வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை ஆய்வு செய்யவும் தூத்துக்குடிக்கு வந்த கனிமொழி எம்.பிக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து
திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்
தூத்துக்குடி, மார்ச் 22:
�மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்� என கனிமொழி எம்பி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வெங்கடேஷ்வரபுரம் கிரா மத்தை கனிமொழி எம்.பி. தத்தெடுத்துள்ளார். அந்த கிராமத்தை ஆய்வு செய்வதற்காகவும், நெல்லையில் தற்கொலை செய்த வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் கனி மொழி எம்பி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை தத்தெடுத்து அங்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன. அதனை ஆய்வு செய்ய வந்துள்ளேன்.
நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்தும், அதிமுக கட்சி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். முத்துகுமாரசாமி தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அதன் பின்னணி குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண் டும். மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். ஆனால், முழுமையாக கைவிடப்படவில்லை.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு எதை சொன்னாலும் அதிமுக அரசு தற்போது கையெ ழுத்து போட்டு விடுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு சீர்குலைந்து விட் டது. குறிப்பாக தென் தமிழகத்தில் கொலை, கொள் ளைகள் அதிகரித்துள்ளன. அதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட் டது. முன் னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், பூங் கோதை, மாநகர செயலா ளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...