தூத்துக்குடி
மாவட்டத்தில் வியாபாரத்தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. வியாபாரம், தொழில் சம்மந்தமாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஏரலை தென்பகுதி மக்களுடன் இணைப்பதற்காக தரைமட்ட பாலம் 1970ல் திமுக ஆட்சியில் அமைத்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவ்வழியாக இராஜபதி, சேதுக்குவாய்த்தான், குரும்பூர், குரங்கணி, மஞ்சள்விளை, மாவடிப்பண்ணை, தென்திருப்பேரை உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஏரல் மற்றும் சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் இந்த தரைமட்ட பாலம் அடிக்கடி மூழ்கியதாலும், பாலம் பழுதடைந்ததாலும் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப்பட்டது.
இதனால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நபார்டு ஆர்.ஐ.டி.பி.எஃப் திட்டத்தில் ரூ16 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் 2012ல் அமைச்சர் சண்முகநாதன் உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்பொழுது 18 மாதங்களில் வேலை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு மாறாக பாலத்தின் வேலை கள் விரைவில் முடிக்கப்பட்டு, வடபகுதியில் பாலத்தின் இணைப்பு சாலை வசதிக்காக பஸ் ஸ்டாப் மற்றும் வீடுகள் உடைக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. ஆனால் தென்பகுதியில் வனத்துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் இணைப்பு சாலை போடுவதற்கு வனத் துறை அனுமதி கிடைக்காததினால் பாலத்தின் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டி 2 வருடமாகியும் புதிய பாலம் காட்சி பொருளாகத்தான் உள்ளது.
இணைப்பு சாலை இல்லாமல்...
காட்சிப் பொருளான ஆற்றுப்பாலம்
தூத்துக்குடி
மாவட்டத்தில் வியாபாரத்தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. வியாபாரம், தொழில் சம்மந்தமாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஏரலை தென்பகுதி மக்களுடன் இணைப்பதற்காக தரைமட்ட பாலம் 1970ல் திமுக ஆட்சியில் அமைத்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவ்வழியாக இராஜபதி, சேதுக்குவாய்த்தான், குரும்பூர், குரங்கணி, மஞ்சள்விளை, மாவடிப்பண்ணை, தென்திருப்பேரை உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஏரல் மற்றும் சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் இந்த தரைமட்ட பாலம் அடிக்கடி மூழ்கியதாலும், பாலம் பழுதடைந்ததாலும் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப்பட்டது.
இதனால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நபார்டு ஆர்.ஐ.டி.பி.எஃப் திட்டத்தில் ரூ16 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் 2012ல் அமைச்சர் சண்முகநாதன் உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்பொழுது 18 மாதங்களில் வேலை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு மாறாக பாலத்தின் வேலை கள் விரைவில் முடிக்கப்பட்டு, வடபகுதியில் பாலத்தின் இணைப்பு சாலை வசதிக்காக பஸ் ஸ்டாப் மற்றும் வீடுகள் உடைக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. ஆனால் தென்பகுதியில் வனத்துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் இணைப்பு சாலை போடுவதற்கு வனத் துறை அனுமதி கிடைக்காததினால் பாலத்தின் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டி 2 வருடமாகியும் புதிய பாலம் காட்சி பொருளாகத்தான் உள்ளது.
இணைப்பு சாலை இல்லாமல்...
காட்சிப் பொருளான ஆற்றுப்பாலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக