T
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனை மாற்றக்கோரி சாயர்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணி வெங்கடேசன்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதியின் வேட்பாளராக ராணி வெங்கடேசன் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை மாற்ற வேண்டும் என்று கோரியும், சாயர்புரம் பஜாரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் நெல்லை குணசிங், சாயர்புரம் நகர தலைவர் மணி, நட்டாத்தி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெயக்குமார், தூத்துக்குடி வட்டார தலைவர் ஏசுவடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள் எழுப்பினர்
ராணி வெங்கடேசனை மாற்றக் கோரியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் செந்தியம்பலம் காங்கிரஸ் தலைவர் சுந்தரபாண்டி, முள்ளன்விளை காங்கிரஸ் தலைவர் மோசஸ், சுப்பிரமணியபுரம் காங்கிரஸ் தலைவர் யாகப்பன், கவுன்சிலர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராணி வெங்கடேசன்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதியின் வேட்பாளராக ராணி வெங்கடேசன் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை மாற்ற வேண்டும் என்று கோரியும், சாயர்புரம் பஜாரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் நெல்லை குணசிங், சாயர்புரம் நகர தலைவர் மணி, நட்டாத்தி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெயக்குமார், தூத்துக்குடி வட்டார தலைவர் ஏசுவடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள் எழுப்பினர்
ராணி வெங்கடேசனை மாற்றக் கோரியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் செந்தியம்பலம் காங்கிரஸ் தலைவர் சுந்தரபாண்டி, முள்ளன்விளை காங்கிரஸ் தலைவர் மோசஸ், சுப்பிரமணியபுரம் காங்கிரஸ் தலைவர் யாகப்பன், கவுன்சிலர் பிச்சைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக