திங்கள், 16 ஜூலை, 2018

ஏரல் அருகே பண்டாரவிளையில் ரூ.30 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட அடிக்கல்



ஏரல் அருகே  பண்டாரவிளையில் ரூ.30 லட்சம் மதிப்பில் இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
 
பெருங்குளம் பேரூராட்சிக்குள்பட்ட  பண்டாரவிளையில் ரூ.19 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பில் மற்றொரு  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை  நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி,  பணிகளை தொடங்கிவைத்தார். பேரூராட்சி செயல்அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்றார்.  தனி அலுவலர் கோபிவெங்கடாசலம்,  முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி செயற்பொறியாளர்
முகமது ஷெரிப், உதவி பொறியாளர் கண்ணன்,சிவத்தையாபுரம் பாசன விவசாயிகள் சங்கச் செயலர் குணசேகரன், தூத்துக்குடி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கல்விகுமார், தொப்பை கணபதி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...