காங்கிரஸ் கட்சி சார்பில் ஏரலில் நடந்த காமராஜரின் பிறந்தநாள் விழாவில், ஏழைகளுக்கு தையல் மிஷின், குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 116வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏரலில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இவ் விழாவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில், ‘’காமராஜர் காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் இன்றைய இளைஞர்கள் காமராஜரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தனுஸ்கோடி ஆதித்தன், ‘’தமிழகத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் காமராஜர். . இரண்டு முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்த போதும் அதை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவைத்தவர்.. தன்னலம் கருதாது மக்கள் மக்கள் என்று மக்களுக்காகவே வாழ்ந்தவர். 1960வது களில் நான் மாணவர் காங்கிரசில் இருந்த போது மூன்று முறை காமராஜரை வைத்து பொது கூட்டம் நடத்தியதை நான் பெருமையாக கருதுகிறேன். வாழும் போதும் சரி இறக்கும் போதும் சாரி தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாதவர் காமராஜர், ‘’ என்று பேசினார்.
மேலும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், சந்திரசேகரன், காமராஜ், தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் ஸ்ரீராமன், சங்கர், ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தென்மண்டல அமைப்பாளர் ஆஸ்கர்; பிரடி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். வட்டாரத் தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, சாத்தான்குளம் ஜனார்த்தனம், திருச்செந்தூர் சற்குரு, ஆழ்வை கோதண்டராமன், உடன்குடி ஜோசப் துரைராஜ், காயல்பட்டினம் முத்துவாப்பு ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
விழாவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் சார்பில் 10 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், ஆதரவற்ற மற்றும் ஏழை பெண்கள் 30 பேருக்கு இலவச தையல் மிஷின், 10 அயர்ன் பாக்ஸ், 2500 குக்கர் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு ஸ்கூல் பேக் உள்ளிட்ட பலவேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், முத்த காங்கிரஸ் தலைவர்களான மங்கலகுறிச்சி அருணாசலம், ஆதிநாதபுரம் சுப்பிரமணியன், ஆறுமுகநேரி சண்முகம், சாத்தான்குளம் ராஜகோபால், உடன்குடி ஆதித்தன் ஆகியோருக்கு பண முடிப்பு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி நன்றி கூறினார்.
விழாவில் காங்கிரஸ் வட்டார, நகர, நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக