தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல் நிலை குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள், நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும்விசாரித்தனர்.

கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பதற்கு, தேவையான உதவி கள் செய்ய தயாராக இருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியல் பணியிலிருந்து ஒதுங்கி, 19 மாதங்களாக, சென்னை, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். இம்மாதம், 24ல், அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது தொண்டை குழாய், சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டது.இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை நலிவு அடைந்தது. சென்னை கோபால புரத்தில் உள்ள வீட்டில் அவரை, 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்ஸ்கள் குழுவினர், கண்காணித்து வருகின்றனர்.
கருணாநிதியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அவரது உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். ஏராளமான, தி.மு.க., தொண்டர்களும், கோபால புரம் வீட்டின் முன்,நள்ளிரவு வரை கூடியிருந்தனர். 'கருணாநிதி நன்றாக இருக்கிறார்; வீட்டின் முன்,யாரும் காத்திருக்க வேண்டாம்' என, தொண்டர் களுக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை , கருணாநிதியின் உடல்நிலை மேலும் பாதிக்கப் பட்டது. 9:00 மணிக்கு, கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் வந்தார்.
வரை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையிலி ருந்து, நான்கு டாக்டர்கள் வந்தனர்; கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.காலை,9:45 மணிக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், அவரை தொடர்ந்து, முதன்மை செயலர் துரைமுருகன், பொதுச்செயலர் அன்பழகன் வந்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தொலை பேசி வாயிலாக, கருணாநிதியின் உடல்நிலை குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தேன். அவர், விரைவில் பூரண நலம் பெற்று, பொது வாழ்க்கைக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுலும், ஸ்டாலினை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
தென் ஆப்ரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே, ஸ்டாலின், கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து, டுவிட்டர் பக்கத்தில், மோடி கூறியிருப்பதாவது: கருணாநிதியின் உடல் நிலை குறித்து, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.மருத்துவ சிகிச்சைக்கு தேவைான உதவிகள் செய்ய, தயாராக இருப்பதாககூறினேன். கருணாநிதி முழுமையாக குணமடைந்து, நல்ல உடல் நலத்துடன் வாழ, கடவுளை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர்கூறியுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கையில், 'கருணாநிதிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர், விரைவில் குணமடைவார்.' அனைவரின் வாழ்த்தும், பிரார்த்தனையும், கருணாநிதியை குணப்படுத்தும். விரைவில், தொண்டர்களை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தொலை பேசி வாயிலாக, கருணாநிதியின் உடல்நிலை குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தேன். அவர், விரைவில் பூரண நலம் பெற்று, பொது வாழ்க்கைக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுலும், ஸ்டாலினை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
தென் ஆப்ரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே, ஸ்டாலின், கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து, டுவிட்டர் பக்கத்தில், மோடி கூறியிருப்பதாவது: கருணாநிதியின் உடல் நிலை குறித்து, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.மருத்துவ சிகிச்சைக்கு தேவைான உதவிகள் செய்ய, தயாராக இருப்பதாககூறினேன். கருணாநிதி முழுமையாக குணமடைந்து, நல்ல உடல் நலத்துடன் வாழ, கடவுளை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர்கூறியுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கையில், 'கருணாநிதிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர், விரைவில் குணமடைவார்.' அனைவரின் வாழ்த்தும், பிரார்த்தனையும், கருணாநிதியை குணப்படுத்தும். விரைவில், தொண்டர்களை
சந்திப்பார்; தன் சொந்தக் குரலில், அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார்' என, கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் பலரும், தி.மு.க., தலைவர் உடல் நலம் குறித்த தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் பலரும், தி.மு.க., தலைவர் உடல் நலம் குறித்த தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
நலமுடன் இருக்கிறார் துரைமுருகன் தகவல்
''தி.மு.க., தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார்,'' என, தி.மு.க., முதன்மை செயலர், துரைமுருகன் தெரிவித்தார். கருணாநிதி வீட்டின் முன், அவர் அளித்த பேட்டி: கருணாநிதி நன்றாக உள்ளார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்றை விட இன்றைக்கு, பல மடங்கு வித்தியாசம் உள்ளது. அவரிடம் சமிக்சை உள்ளது. சிலர் வேண்டுமென்றே, வேண்டாத வதந்திகளை பரப்பி, மக்களை குழப்புகின்றனர்.
எங்கள் முகத்தை பார்த்தாலே, தலைவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடி யும். அவர், விரைவில் பூரண குணமடைவார் என, கருதுகிறேன்; நாளை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக