ஞாயிறு, 16 மார்ச், 2014

ஏரல் அருகே முன்விரோதத்தில் 800 வாழைகள் வெட்டி சாய்ப்பு

ஏரல் அருகே பெருங்குளம் உடையடியூரில் முன்விரோதத்தில் குலை தள்ளிய வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
ஏரல் அருகே முன்விரோதத்தில்
800 வாழைகள் வெட்டி சாய்ப்பு
ஏரல், மார்ச் 16:
ஏரல் அருகே முன்விரோதத்தில் 800 வாழைகளை வெட்டி சாய்க்கப்பட்டன. இது தொடர்பாக அண்ணன்& தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்.
ஏரல் அருகே பெருங்குளம் உடையடியூரை சேர்ந்தவர் கோபால் மகன் முருகப்பெருமாள் என்ற கண்ணன் (32). விவசாயி. இவர் ஊருக்கு அருகில் உள்ள தனது வயலில் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலை முருகப்பெருமாள் தனது வாழைத்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்றார். அப் போது தோட்டத்திற்குள் இருந்து அதே ஊரை சேர்ந்த வத்திரப்பு மகன்கள் கருவேலமுத்து, கருவேல ராஜா இருவரும் முன் விரோதத்தில் 800க்கும் மேற்பட்ட வாழைகளை அரிவாளால் வெட்டி விட்டு முருகப்பெருமா ளுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இது குறித்து அவர் ஏரல் போலீ சில் புகார் செய்தார். எஸ்.ஐ. மந்திரமூர்த்தி விசா ரணை நடத்தி கருவேலமுத்து, கருவேலராஜா இருவரையும் தேடி வருகிறார். முன் விரோதத்தில் வாழை கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் ஏரல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...