திங்கள், 10 மார்ச், 2014

ஏரலில் அனைத்து கட்சியினருடன் போலீசார் தேர்தல் ஆலோசனை

ஏரல் போலீஸ்  நிலையத்தில் போலீசார் மற் றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு ஸ்ரீவை குண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமை வகித்தார். ஏரல் எஸ்.ஐ.க்கள் மந்திரமூ�த்தி, சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக சார்பில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் பிஜி. ரவி, ஏரல் செயலாளர் பார்த்திபன், பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அதிமுக சார்பில் நகர செயலாளர் ஆத்திப்பழம், அழகுப்பிள்ளை, காங் கிரஸ் நகர தலைவர் பாக்கர் அலி, சமக ஸ்ரீவை ஒன்றிய தெற்கு செயலாளர் தேவராஜ், ஏரல் துணைச்செயலாளர் கண்ணன், பாஜ ஒன்றிய பொதுச்செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைத்தலைவர் முத்துமாலை உட்பட சர்வகட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசி யல் கட்சி வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு இடம், நாள், நேரம் குறித்த விபரங்களை போலீசில் 48 மணி நேரத்திற்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தலில் கடைபிடிக்க கூடிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...