பழையகாயலில் இருந்து அகரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
ஏரல் அருகே
பழையகாயல்&அகரம்
பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
ஏரல், மார்ச் 10:
ஏரல் அருகே பழையகாயல் & அகரம் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே பழையகாயல் மெயின் ரோட்டில் இருந்து அகரம் ஊருக்கு செல்லும் ரோடானது குண்டும், குழியுமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாரமங்கலம், அகரம் உட்பட பகுதிகளில் இருந்து பழையகாயல் பள்ளிக்கு இரு சக்கர வாகனங்களில் சென்று வரும் மாணவ, மாணவிகள் இந்த ரோட்டில் தட்டு தடுமாறி அவதிப்பட்டு சென்று வருகின்றனர். விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களுக்கு அதிக அளவு இந்த ரோட்டை பயன் படுத்தி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடிக்கு வியாபாரம், தொழில் சம்மந்தமாக சென்று வர வேண்டும் என்றால் அகரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் இவ்வழியாக பழையகாயல் சென்று அங்கிருந்து மக்கள் தூத்துக்குடிக்கு சென்று வருகின்றனர்.
எனவே அகரம் பகுதி மக்களுக்கு முக்கிய ரோடாக உள்ள அகரம்&பழையகாயல் ரோட்டை உடன் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் அகரத்தில் இருந்து மாரமங்கலம் செல்லும் மெயின் ரோடும் குண்டும், குழியுமாக உள் ளது. இந்த ரோட்டையும் சேர்த்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக