தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜிக்கு ஆதரவாக ஏரலில் நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரித்தார்.
கொள்ளையர்களிடம் மக்களை அடகு வைத்த காங்கிரஸ்
ஸ்ரீவைகுண்டத்தில் நடிகர் சிங்கமுத்து பேச்சு
ஸ்ரீவைகுண்டம், மார்ச் 26:
�வெள்ளையர்களிடம் 200 வருடம் அடிமைப்பட்டு கிடந்த நம்மை தனியார் கொள்ளையரிடம் காங்கிரஸ் அடகு வைத்து விட்டது� என ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பிரசாரத்தில் நடிகர் சிங்கமுத்து பேசி னார்.
ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அதிமுக வேட் பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப் போது அவர் பேசியதாவது:
இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. இந்தியாவின் தலை விதியை நிர்ணயிக்கப் போகும் தேர்தல். எனவே வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான திட்டங்கள் எதையும் மத்திய அரசு தராமல் ஏமாற்றி வருகிறது.
எனவே தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப் போது தான் தமிழகத்தின் உரிமைகள் நமக்கு கிடைக் கும்.
இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது. தவறான பொருளாதார கொள்கையால் காங்கிரஸ் கட்சி நாட்டை சீரழித்து விட்டது.
வெள்ளையர்களிடம் 200 வருடம் அடிமைப்பட்டு கிடந்த நம்மை தனியார் கொள்ளையரிடம் காங்கிரஸ் அடகு வைத்து விட்டது.
விவசாயத்தை கூட செயற்கை விதைகளால் அளிக்க நினைக்கிறது. எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவைகுண்டம் பேருராட்சி தலைவர் அருணாசலம், நகர செயலாளர் பால்துரை, மாவட்ட வக்கீல் அணி துணைச் செயலாளர் கருப்பசாமி, ஒன்றிய ஜெ. பேரவை பொருளாளர் அய்யனார், மாவட்ட அவைத் தலைவர் தக்கர் சுப்பையா, பார்வர்டு பிளாக் மாநில இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் உடையார், நகர செயலாளர் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் ஏரல் காந்திசிலை பஸ் நிறுத்தம் அருகில் நடிகர் சிங்கமுத்து திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய முன்னாள் செய லாளர் ஆறுமுகநயினார், ஏரல் நகர செயலாளர் ஆத்திப்பழம், பெருங்குளம் செயலாளர் செல்லத்துரை, தொழிலதிபர் அழகுராம கிருஷ்ணன், தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீவை குண்டம் யூனியன் முன் னாள் கவுன்சிலர் அழ கேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக