தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுத்தது. இதனால் சாலையோர குளிர்பான கடைகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திடீர் மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை திடீரென வலுத்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது. காலை சுமார் 10 மணி வரை பெய்த மழையால் தூத்துக்குடியில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. பெரும்பாலான இடங்களில் ரோடுகளை மூழ்கடித்தபடி தண்ணீர் கிடக்கிறது. இதில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக