ஏரல், மார்ச் 16:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏரல் பகுதியில் உள்ள கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.
நாடாளுமன்ற தேர் தலை யொட்டி விளம்பர போர்டுகள், சுவரொட்டிகள், கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏரல் வருவாய் ஆய்வாளர் பொன்லெட்சமி தலைமையில் சிறுத்தொண்டநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரி, வாழவல்லான் கிராம நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சுவரொட்டிகள், விளம்பர நோட்டீஸ்கள், பேனர்களை அகற்றினர். ஏரலில் சில கட்சியினர் கட்சி கொடிக்கம்பங்கள் தெரியாதவாறு துணியை சுற்றி மறைத்து இருந்தனர்.
அப்படி மறைத்து வைக்காமல் ஏரல் காந்தி சிலை அருகே இருந்த 7 கட்சி கொடிக் கம்பங்கள் மற்றும் பஸ் நிலையம் அருகிலிருந்த 5 கொடி கம்பங் களை அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக