செவ்வாய், 8 டிசம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மழை ஸ்ரீவைகுண்டம் அணைக்கு 30 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

IST
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை தொடர்ந்தது. அணைகளின் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழையின் காரணமாகவும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
பரவலாக மழைதூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தாமிபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
30 ஆயிரம் கனஅடி தண்ணீர்அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாகவும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு நேற்று மொத்தம் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் ஆற்றில் தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே வீணாகி கடலில் போய் கலந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள தாழ்வான கிராமங்களில் வசித்து வரும் மக்கள், மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் ம.ரவிகுமார் அறிவுறுத்தினார்.
பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறைநேற்று காலை முதல் தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வைப்பாறு பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
வைப்பாறு– 21
தூத்துக்குடி– 20.50
குலசேகரன்பட்டினம்– 18
சாத்தான்குளம்– 16
ஸ்ரீவைகுண்டம்– 14
திருச்செந்தூர்– 14
காயல்பட்டினம்– 11
கடம்பூர்– 10
வேடநத்தம்– 10
கயத்தாறு– 9
கழுகுமலை– 5
எட்டயபுரம்– 3
காடல்குடி– 3
கீழஅரசடி– 2.50
கோவில்பட்டி– 2
ஓட்டப்பிடாரம்– 2
விளாத்திகுளம்– 2
மணியாச்சி– 2
சூரங்குடி– 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...