ஏரல் அருகே மங்கலகுறிச்சி & பெருங்குளம் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஏரல் அருகேயுள்ள மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றுக்குள் இருந்து குடி தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் மங்களகுறிச்சி, பெருங்குளம், நட்டாத்தி, சாயர்புரம் வழியாக தூத்துக்குடி மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள பாலத்தில் குடிநீர் இரும்பு குழாயில் மூன்று இடங்களில் பெரிய உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த உ�ட்பில் இருந்து வெளிவரும் தண்ணீர் பாலத்தின் மீது தேங்கி வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் நடப்பவர்கள் மீது சேரும், சகுதியும் ஆகிறது. பைக்கில் செல்பவர்கள் மீது தண்ணீர் சீறி பாய்வதால் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பினால் அருகில் உள்ள ரோடுகள் அரிப்பு ஏற்பட்டு படுகுழிகளாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இந்த உடைப்பினால் தினசரி பல லட்சம் லிட்டர் குடி தண்ணீர் வீணாக அருகில் உள்ள வாய்க்காலுக்கும், வயல் வெளிக்கும் செல்கிறது.
இதேபோல் பண்டாரவிளையில் இருந்து நட்டாத்தி செல்லும் மெயின் ரோட்டில் பண்டாரவிளை அருகிலும் இரண்டு இடங்களில் இதே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ரோடு சேதாரமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள இந்த உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே மங்கலகுறிச்சி & பெருங்குளம் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக