ஏரலில் திமுக இளைஞரணி துண்டு பிரசுரம் விநியோகத்தை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி, மாவட்ட இளைஞரணி ஜெகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஏரலில் திமுக இளைஞரணி துண்டு பிரசுரம் விநியோகம்
ஏரல், பிப். 9:
ஏரலில் திமுக இளைஞரணி சார்பில் திமுக ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக அரசின் அவலநிலையும் விளக்கி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் பிஜி ரவி தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அமீர் ஹம்சா, நகர செயலாளர்கள் ஏரல் பார்த்திபன், சாயர்புரம் வரதராஜ் ஸ்டாலின், பெருங்குளம் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி, மாவட்ட இளைஞரணி ஜெகன் ஆகியோர் துண்டு பிரசுரம் விநியோகத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தூத்துக்குடி மாநகர துணை அமைப்பாளர் அருண் சுந்தர், ஸ்ரீவை ஒன்றிய துணை செயலாளர் வைகுண்டராமன், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் மணிவண்ணன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், நகர இளைஞரணி அமைப்பாளர்கள் முருகராஜ், கண்ணன், நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக