ஏரல்&திருவழுதிநாடார்விளை சாலை விரிவாக்கம் செய்த வயல் பகுதியில் தடுப்பு சுவர் கட்டாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி மெயின் ரோட்டில் திருவழுதிநாடார்விளை பஸ்நிறுத்தம் வரை சாலை அகலமாக இருந்தது. ஆனால் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏரல் வரை சாலை மிககுறுகலாக இருந்தது.
இதனால் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடந்த மாதம் இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சில இடங்களில் சாலை 7 அடி உயரமாக உள்ளது. மேலும் சாலையோரத்தில் மண் போடப்படாமல் உள்ளது.
இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது சாலைவிட்டு கீழே இறங்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
ஏரலில் இருந்து பெருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மற்றும் பண்டாரவிளை, நட்டாத்தி, சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கும் அதிகமாக பஸ் போக்குவரத்து உள்ளது.
இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் திருவழுதிநாடார்விளை, மங்கலகுறிச்சி, மொட்டச்சி குடியிருப்பு, பெருங்குளம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏரல் பள்ளிகளுக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பயன்படுகின்றனர்.
எனவே திருவழுதிநாடார்விளை பஸ்நிறுத்தத்தில் இருந்து ஏரல் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் தடுப்பு சுவர்கள் அமைத்து பலப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரலில் இருந்து திருவழுதிநாடார்விளை பஸ் நிறுத்தம் வரை சாலை விரிவாக்கம் செய்ததில் தடுப்பு சுவர் கட்டாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக