வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தில் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. ஆய்வு

ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக புதிய பாலம் திறக்கப்படவில்லை. ஆனாலும் பொதுமக்கள் அந்த பாலத்தின் வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர். பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி., ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய பாலம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தற்போதைய அரசு, புதிய பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் விரைவு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் வந்து செல்லாமல் மெயின் ரோட்டில் சென்று விடுகின்றன. மின் விளக்குகள் அமைக்கப்படாததால் புதிய பாலத்தில் இரவு நேரத்தில் செல்லும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய பாலத்தில் மின் விளக்குகள் அமைத்து, அதிகாரப்பூர்வமாக திறக்க வேண்டும். மேலும் கருங்குளம்– கொங்கராயகுறிச்சி, விளாத்திகுளம்– வைப்பார் ஆகிய பகுதிகளில் புதிய பாலம் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...