தொழிலதிபர் குடும்பத்தோடு தற்கொலை
ஏரல் பைனான்சியர் கைது
பாளை தொழிலதிபர் குடும்பத் தோடு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஏரல் பைனான்சியர் கைது செய் யப்பட்டார். அவரது கூட் டாளி மற்றும் உறவினர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாளை. கேடிசி நகர் அருகே உள்ள ரவிசங்கர் நகரில் வசித்த தொழிலதிபர் பரிபூரண கண்ணன் கடந்த 22ம்தேதி தனது மனைவி, மகளுடன் காரில் அமர்ந்த வாறு சிலிண்டரை வெடிக் கச்செய்து தற்கொலை செய்தார். ஏரலை சேர்ந்த லட்சுமணன், சுப்பிரமணியன் ஆகியோர் அதிக வட்டி தருவதாக கூறி இவரிடம் பல லட்சம் பணம் பெற்றனர். அதை கொடுக்காததோடு, தனது மீது புகாரும் கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்தது போலீஸ் விசா ரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்த பாளை. பெருமாள்புரம் போலீசார் நேற்று ஏரலுக்கு சென்று சுப்பிரமணியனை கைது செய்தனர். இதற்கிடையே ஏரல் மங்களகுறிச்சியை சேர்ந்த லட்சுமணன், அவரது தாய் பேச்சியம்மாள், உறவினர் மாணிக்கவாசகம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டாளிகள் முன்ஜாமீன் மனு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக