சூழவாய்க்கால் பஞ்சாயத்து பகுதிகளில் இலவச மிக்சி, கிரைண்டரை பஞ்சாயத்து தலைவர் அனஸ் வழங்கினார்.
சூழவாய்க்காலில்
மிக்சி, கிரைண்டர் வழங்கல்
ஏரல், பிப்.21:
ஏரல் அருகே சூழவாய்க்கால் பஞ்சாயத்து பகுதியில் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் அனஸ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பொன்லெட்சமி, முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல்ரஹீம், பஞ்சாயத்து துணைத்தலைவர் சங்கரநாராயணன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பசீராபீவி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் மன்சூரா பேகம், காசிநாராயணன், முத்தலிபு, வேளாங்கண்ணி மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக