IST
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் முகைதின் ஜாமியா மஸ்ஜித் சார்பில் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். காலை 7.30 மணிக்கு பேட்மாநகரம் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.
அப்துல் ஹமிது ஆலிம் சிறப்பு தொழுகையை நடத்தினார். பேட்மாநகரம் ஜமாத் தலைவர் சாலிஷ் சாதிப், செயலாளர் பீர் முகமது, துணைத் தலைவர் சிராஜிதீன், நூருல் இமான் கல்வி அறக்கட்டளை சித்திக் ஆலிம், தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அஸரப் அலி, அகமது தாவூது, கிளை தலைவர் நசிம் முகைதின் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கினர்.
அப்துல் ஹமிது ஆலிம் சிறப்பு தொழுகையை நடத்தினார். பேட்மாநகரம் ஜமாத் தலைவர் சாலிஷ் சாதிப், செயலாளர் பீர் முகமது, துணைத் தலைவர் சிராஜிதீன், நூருல் இமான் கல்வி அறக்கட்டளை சித்திக் ஆலிம், தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அஸரப் அலி, அகமது தாவூது, கிளை தலைவர் நசிம் முகைதின் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக