வியாழன், 17 செப்டம்பர், 2015

ஏரல் அருகே வாழைகள் வெட்டிச் சாய்ப்பு; போலீஸ் விசாரணை

 IST
ஏரல்,

ஏரல் அருகே நூற்றுக்கணக்கான வாழைகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழைகள் வெட்டிச்சாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தீப்பாச்சி நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர், மூக்காண்டி. அவருடைய மகன் திருமாரிராஜ் (வயது 35).

இவர் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் குளத்தின் கரையில் உள்ள மீனாட்சி என்பவரது வயலில் வாழைகள் பயிரிட்டு உள்ளார். திருமாரி ராஜ், வயலுக்குச் சென்று வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு சென்றார்.

பின்னர் அங்கு வந்த மர்மநபர்கள், வாழைகளை வெட்டிச் சாய்த்துவிட்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

நேற்று முன்தினம் திருமாரி ராஜ் தனது வயலுக்கு சென்றபோது, நூற்றுக்கணக்கான வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வாழைகளை வெட்டிச்சாய்த்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...