திங்கள், 20 பிப்ரவரி, 2017

தூத்துக்குடியில் அமைச்சர்– எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடியில் அமைச்சர்– எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடியில் அமைச்சர்– எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி, 

பிளவு

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் மத்தியிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்த அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் சொந்த தொகுதிகளுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வந்த தகவலின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் வீடு, அலுவலகம், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அமைச்சர்

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. இவர் வீடு கோவில்பட்டி– நெல்லை ரோட்டில் மீனாட்சி நகரில் உள்ளது. இவர் வீட்டுக்கும், கோவில்பட்டி புதுரோடு அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதே போல் கோவில்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் (சம்மந்தி) வக்கீல் செல்லப்பாண்டியன் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள்

விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. உமா மகேசுவரி வீடு, எட்டயபுரத்தில் உள்ளது. அங்கு எட்டயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதே போல் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி பகுதியில் உள்ள ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தராஜ் உத்தரவில், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...