17 குரங்குகள் பிடிபட்டன குற்றாலம் வனப்பகுதியில் விடப்பட்டன

17 குரங்குகள் பிடிபட்டன குற்றாலம் வனப்பகுதியில் விடப்பட்டன
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, குரங்கணி பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதையடுத்து வனத்துறையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூண்டுகளை வைத்து சுமார் 40 குரங்குகளை பிடித்துச் சென்று, குற்றாலம் வனப்பகுதியில் விட்டனர். அதன்பின்பும் குரங்குகள் அட்டகாசம் அந்த பகுதியில் தொடர்ந்து வருகிறது.
நேற்று வனத்துறையினர் மீண்டும் கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 17 குரங்குகள் பிடிக்கப்பட்டன. அவற்றை பெரிய கூண்டில் அடைத்து, லோடு ஆட்டோவில் ஏற்றிச் சென்று, குற்றாலம் வனப்பகுதியில் விட்டனர்.
மாவடிபண்ணையில் இன்னும் சுமார் 50 குரங்குகள் சுற்றி திரிவதாகவும், அவற்றை பிடித்து செல்லும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, குரங்கணி பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதையடுத்து வனத்துறையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூண்டுகளை வைத்து சுமார் 40 குரங்குகளை பிடித்துச் சென்று, குற்றாலம் வனப்பகுதியில் விட்டனர். அதன்பின்பும் குரங்குகள் அட்டகாசம் அந்த பகுதியில் தொடர்ந்து வருகிறது.
நேற்று வனத்துறையினர் மீண்டும் கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 17 குரங்குகள் பிடிக்கப்பட்டன. அவற்றை பெரிய கூண்டில் அடைத்து, லோடு ஆட்டோவில் ஏற்றிச் சென்று, குற்றாலம் வனப்பகுதியில் விட்டனர்.
மாவடிபண்ணையில் இன்னும் சுமார் 50 குரங்குகள் சுற்றி திரிவதாகவும், அவற்றை பிடித்து செல்லும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக