திங்கள், 20 பிப்ரவரி, 2017

உண்மையான அதிமுக ஓ.பி.எஸ். பக்கமே உள்ளது: எம்.எல்.ஏ. எஸ்.பி. சண்முகநாதன்

உண்மையான அதிமுக ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் உள்ளது என, எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனுக்கு தூத்துக்குடி மாவட்டம் புதூர் நான்குவழிச் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை, முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது எஸ்.பி. சண்முகநாதன் செய்தியாளர்களிடம் கூறியது : உண்மையான அதிமுக ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் இருக்கிறது. எனவே, மக்களின் பேராதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களைச் சந்திக்கிறோம். நான் எனது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள மக்களை சந்திக்க உள்ளேன். தமிழகம் முழுவதும் ஓ. பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
இச்சந்திப்பின்போது மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தெய்வேந்திரன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் கவுரிதுரைப்பாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜாராம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணைச் செயலர் எட்டயபுரம் மாரிமுத்துபாண்டி, டாக்டர் சந்திரன், ஊராட்சித் தலைவர்கள் சண்முகவேல், ஜெயராஜ், புதூர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...