வியாழன், 9 பிப்ரவரி, 2017

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சண்முகநாதனின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்–அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி அளிக்க கோரியும், தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவு பெற்ற பன்னீர்செல்வம் தலைமையிலான அணியே உண்மையான அ.தி.மு.க. என்று வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பினர். தொடர்ந்து முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம், ஆளுநரை சந்திக்க சென்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

யார்–யார்?

ஆர்ப்பாட்டத்தில் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் செல்வகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ராஜ் நாராயணன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வீரபாகு, பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு துணைச்செயலாளர்கள் கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...