தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது

தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி,
புதிய விமான சேவை
தூத்துக்குடி–சென்னை இடையே தினமும் காலை மற்றும் மாலையில் ‘ஸ்பைஸ் ஜெட்‘ தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக உருவாகி உள்ளதால், விமான சேவையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி–சென்னை இடையே புதிதாக ‘ஏர்கார்னிவெல்‘ என்னும் நிறுவனம் புதிய விமானத்தை இயக்க முடிவு செய்தது.
அதன்படி இந்த விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘ஏர்கார்னிவெல்‘ நிறுவனத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவுக்கு விமான நிறுவன மேலாளர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி மனிஷ்குமார் சிங், பொதுமேலாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
வரவேற்பு
நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு மாலை 4.42 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது தூத்துக்குடி விமான நிலையம் சார்பில் புதிய விமானத்தை வரவேற்கும் விதமாக தீயணைப்பு வாகனத்தின் மூலம் விமானத்தின் இருபுறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 55 பயணிகள் வந்தனர். அவர்கள் அனைவரும் விமான ஓடுதளத்தில் இருந்து பஸ் மூலம் பயணிகள் வெளியேறும் அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி மற்றும் விமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.
இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக 47 பயணிகள் வந்து இருந்தனர். அவர்களுக்கும் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. மாலை 5.10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இது குறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி கூறும்போது, தூத்துக்குடிக்கு புதிதாக ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் விமான கட்டணம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.
புதிய விமான சேவை
தூத்துக்குடி–சென்னை இடையே தினமும் காலை மற்றும் மாலையில் ‘ஸ்பைஸ் ஜெட்‘ தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழில் நகரமாக உருவாகி உள்ளதால், விமான சேவையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி–சென்னை இடையே புதிதாக ‘ஏர்கார்னிவெல்‘ என்னும் நிறுவனம் புதிய விமானத்தை இயக்க முடிவு செய்தது.
அதன்படி இந்த விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘ஏர்கார்னிவெல்‘ நிறுவனத்துக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவுக்கு விமான நிறுவன மேலாளர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி மனிஷ்குமார் சிங், பொதுமேலாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
வரவேற்பு
நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு மாலை 4.42 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது தூத்துக்குடி விமான நிலையம் சார்பில் புதிய விமானத்தை வரவேற்கும் விதமாக தீயணைப்பு வாகனத்தின் மூலம் விமானத்தின் இருபுறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 55 பயணிகள் வந்தனர். அவர்கள் அனைவரும் விமான ஓடுதளத்தில் இருந்து பஸ் மூலம் பயணிகள் வெளியேறும் அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி மற்றும் விமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.
இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக 47 பயணிகள் வந்து இருந்தனர். அவர்களுக்கும் ரோஜாப்பூ மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. மாலை 5.10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இது குறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் தாஜி கூறும்போது, தூத்துக்குடிக்கு புதிதாக ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் விமான கட்டணம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக