இயந்திரத்தில் திடீர் கோளாறு
ஏரலில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு
ஏரல், ஏப். 25:ஏரலில்
வாக்குப்பதிவு நடந்த போது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி 7 மற்றும் 8வது வார்டுகளுக்கான வாக்கு பதிவு (பூத் எண். 87) திருவழுதிநாடார்விளை டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளியில் நடந்தது. இதில் தேர்தல் அதிகாரியாக சுந்தரி ஜெயசிங் (55) இருந்தார். காலை 11.30 மணிக்கு 232 வாக்குகள் பதிவாகி இருந்த போது வாக்கு பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. உடன் வாக்குபதிவு நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராமசாமி, சிறுத்தொண்டநல்லூர் வி.ஏ.ஓ. சமுத்திரக்கனி மற்றும் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ. மந்திரமூர்த்தி விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு மீண்டும் வாக்கு பதிவு துவங்கியது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக