ஏரலில் போலீஸ்
கொடி அணிவகுப்பு
ஏரல், ஏப். 15:
வாக்காளர்கள் அச்சுறுத்தலின்றி சுதந்திர மாக வாக்கு அளிக்க வேண்டி போலீஸ் கொடி அணிவகுப்பு பேரணி ஏரல், பெருங்குளம் மற்றும் சாயர்புரம் பகுதியில் நடந்தது. போலீஸ் ஏ.டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் பேரணிக்கு தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமராஜன் முன்னிலை வகித்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள் கிங்சிலி தேவஆனந்த், ராஜசுந்தர், பிரான் சிஸ் சேவியர், எஸ்.ஐ. மந்திரமூர்த்தி உட்பட போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் கலந்து கொண்டனர்.
ஏரலில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக