வியாழன், 17 ஏப்ரல், 2014

, சூளைவாய்க்கால், சிறுத்தொண்டநல்லூர், பகுதிகளில் வீதி, வீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஏரல், : விவசாயிகளை காப்பாற்ற தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளங் கள் தூர் வார நடவடிக்கை எடுப்பேன் என சாயர்புரம் பகுதியில் பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் ஜெகன் உறுதி அளித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகன் நேற்று ஸ்ரீவைகுண் டம் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். சாயர்புரம் அருகே பேய்குளத்தில் பிரசாரத்தை துவக்கிய அவர், சாலை, சிவத்தையாபுரம், புளியநகர், நந்தகோபாலபுரம், நடுவக்குறிச்சி, சாயர்புரம், சுப்பிரமணியபுரம், பட்டாண்டி விளை, முள்ளன்விளை, குமாரபுரம், நட்டாத்தி, வைகுந்தபுரம், திருப்பணிசெட்டிகுளம், சக்கம்மாள்புரம், மொட்டதாதன்விளை, சின்னநட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், சூளைவாய்க்கால் பகுதிகளில் வீதி, வீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப் போது அவர் பேசியதாவது: 
இப்பகுதி குளங்கள் தூர் வாரப்படாததால் தண்ணீரை சேமிக்க முடி யாமல் விவசாயிகள் விவ சாயம் செய்ய சிரமப்படுகின்றனர். திமுக ஆட்சியில் இப்பகுதி விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டன. ஆனால் அணையில் 40 அடி தண்ணீர் இருந்தும் விவசாயத்திற்கு அதிமுக அரசு தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. 
நான் வெற்றி பெற்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்கள் தூர் வார நடவடிக்கை எடுப்பேன். அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் நிதியை அதிகளவு பெற்று தூத்துக்குடி மாவட்டத்தை தொழில் மற்றும் விவசாயத்தை வளர்ச்சி அடைய செய்வேன். எனவே அனை வரும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசி னார்.
மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப் பாளர் ராஜ்மோகன் செல்வின், ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரவி, ஒன்றிய முன்னாள் செயலாளர் மெய்யழகன், சாயர்புரம் நகர செயலாளர் வரத ராஜ் ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட விவசாய தொழி லாளர் அணி துணை அமைப்பாளர் துரைராஜ், நகர துணை செயலாளர் கிறிஸ்டோபர், ஒன்றிய பிரதிநிதி நாராயணன், ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப் பாளர் பாலமுருகன், நட்டாத்தி பஞ்சாயத்து துணைத் தலைவர் நாரா யணன், செயலாளர் சாமு வேல், தொண்டரணி கார்த்தீசன், அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...