வியாழன், 17 ஏப்ரல், 2014

தூத்துக்குடியில் 21-ல் கனிமொழி பிரசாரம்.5 மணிக்கு ஏரலிலும் பேசுகிறார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி (ஏப். 21) பிரசாரம் செய்கிறார்.
இதுகுறித்து திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஏப். 21 ஆம் தேதி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
அன்றையதினம் பகல் 3  மணிக்கு முத்தையாபுரத்திலும், 3.30 மணிக்கு பழைய காயலிலும்,  4 மணிக்கு முக்காணியிலும், 4.30 மணிக்கு வாழவல்லானிலும், 5  மணிக்கு ஏரலிலும் பேசுகிறார். தொடர்ந்து, 5.30 மணிக்கு குரும்பூரிலும், மாலை 6 மணிக்கு நாசரேத்திலும், இரவு 7.00 மணிக்கு சாத்தான்குளத்திலும் கனிமொழி பிரசாரம் செய்கிறார். பின்னர், இரவு 7.30 மணிக்கு மெஞ்ஞானபுரம் பகுதியிலும்,  8 மணிக்கு பரமன்குறிச்சியிலும்,  8.30 மணிக்கு உடன்குடியிலும், இரவு 9 மணிக்கு குலசேகரபட்டினத்திலும் கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...