தமிழக தேர்தல் பற்றி டெலிவிஷன்களின் கருத்து கணிப்பு முடிவுகள்
சென்னை,
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை அ.தி.மு.க கைப்பற்றும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதுபோல பா.ஜனதாவும் தே.மு.தி.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
என்றாலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
வெற்றி யாருக்கு
இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற போவது யார் என்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. தமிழ் தொலைக்காட்சியான தந்தி டி.வி.யும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
டெலிவிஷன்கள் நடத்திய கருத்துகணிப்பில் வெளியான முடிவுகள் பற்றிய விவரம் வருமாறு:–
தந்தி டி.வி.
அ.தி.மு.க: 18
தி.மு.க: 8
பா.ஜனதா கூட்டணி: 5
இழுபறி– 9
சி.என்.என். ஐ.பி.என்
அ.தி.மு.க: 15–21
தி.மு.க: 10–16
பா.ஜனதா கூட்டணி: 6–10
என்.டி.டி.வி
அ.தி.மு.க: 22
தி.மு.க: 14
பா.ஜனதா கூட்டணி: 3
டைம்ஸ் நவ்
அ.தி.மு.க: 27
தி.மு.க: 6
பா.ஜனதா கூட்டணி: 3
காங்கிரஸ்: 1
கம்யூனிஸ்டு: 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக