ஞாயிறு, 15 நவம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக சாயர்புரம் பகுதியில் 2 குளங்கள் உடைந்தன

T
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாயர்புரம் பகுதியில் 2 குளங்கள் உடைந்தன.
பலத்த மழைவங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி கிடக்கிறது. இந்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 74 மில்லி மீட்டர் மழை பெய்தது.
2 குளங்கள் உடைந்ததுசாயர்புரம் பகுதியில் உள்ள நட்டாத்தி, கட்டாலங்குளம், திருப்பணி செட்டிக்குளம், பேய்குளம், ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் அதிகமாக வந்து குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதில் திருப்பணிசெட்டிகுளம் புனைக்குளம் ஆகிய 2 குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நட்டாத்தி மெயின் ரோட்டில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் சில மணி நேரங்கள் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேய்குளத்திலிருந்து சாயர்புரம் வழியாக பெருங்குளம் செல்லும் சாலை குண்டு குழியாக கிடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை விவரம்தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
கோவில்பட்டி– 22
ஓட்டப்பிடாரம்– 74
சாத்தான்குளம்– 31
ஸ்ரீவைகுண்டம்– 70.20
தூத்துக்குடி– 30.30
திருச்செந்தூர்– 60.20
விளாத்திகுளம்– 29.20
கயத்தாறு– 39
காயல்பட்டினம்– 52
குலசேகரன்பட்டினம்– 52.50
கீழஅரசடி– 68
எட்டயபுரம்– 21
கடம்பூர்– 42
மணியாச்சி– 72
வேடநத்தம்– 67
சூரங்குடி– 28
காடல்குடி– 20
வைப்பார்– 49
கழுகுமலை– 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...