T
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான இடி மின்னலும் இருந்தது. தொடர்ந்து அதிகாலையில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சில மணி நேரங்கள் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் ஆறாக பாய்ந்து ஓடியது.
இதே போன்று மணியாச்சி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் புதுக்கோட்டை அருகே உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை பழைய பாலம் அருகே உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் வேகமாக சென்றது. இதனால் அந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. குளம் வேகமாக நிரம்பி வந்த நிலையில் குளத்தில் உள்ள 24 கண் மதகில் 3 மதகு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. கோரம்பள்ளம்-அத்திமரப்பட்டி இடையேயான ரோட்டில் உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து உள்ளது.
குளத்தூரில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதே போல் குளத்தூரை சுற்றியுள்ள பனையூர், முத்துராமலிங்கபுரம், சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், வேடநத்தம், முத்துக்குமாரபுரம், கெச்சிலாபுரம் மற்றும் பல கிராமங்களில் பலத்த மழை பெய்ததையொட்டி அனைத்து குளங்களும் நிரம்பி வருகிறது. குளத்தூரில் உள்ள குளங்களுக்கு கடந்த 3 வருட காலமாக தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் தெற்கு, வடக்கு குளங்கள் நிரம்பி வருகிறது.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-
கோவில்பட்டி - 11
ஓட்டப்பிடாரம் - 20
சாத்தான்குளம் - 34
ஸ்ரீவைகுண்டம் - 37
தூத்துக்குடி - 33.20
திருச்செந்தூர் - 38
விளாத்திகுளம் - 4.5
கயத்தாறு - 6
காயல்பட்டினம் - 38
குலசேகரன்பட்டினம்- 28
கீழஅரசடி - 4
எட்டயபுரம் - 4
கடம்பூர் - 21
மணியாச்சி - 65
வேடநத்தம் - 30
சூரங்குடி - 29
காடல்குடி - 5
வைப்பார் - 66
கழுகுமலை - 13
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான இடி மின்னலும் இருந்தது. தொடர்ந்து அதிகாலையில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சில மணி நேரங்கள் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் ஆறாக பாய்ந்து ஓடியது.
இதே போன்று மணியாச்சி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் புதுக்கோட்டை அருகே உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை பழைய பாலம் அருகே உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் வேகமாக சென்றது. இதனால் அந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. குளம் வேகமாக நிரம்பி வந்த நிலையில் குளத்தில் உள்ள 24 கண் மதகில் 3 மதகு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. கோரம்பள்ளம்-அத்திமரப்பட்டி இடையேயான ரோட்டில் உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து உள்ளது.
குளத்தூரில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதே போல் குளத்தூரை சுற்றியுள்ள பனையூர், முத்துராமலிங்கபுரம், சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், வேடநத்தம், முத்துக்குமாரபுரம், கெச்சிலாபுரம் மற்றும் பல கிராமங்களில் பலத்த மழை பெய்ததையொட்டி அனைத்து குளங்களும் நிரம்பி வருகிறது. குளத்தூரில் உள்ள குளங்களுக்கு கடந்த 3 வருட காலமாக தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் தெற்கு, வடக்கு குளங்கள் நிரம்பி வருகிறது.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-
கோவில்பட்டி - 11
ஓட்டப்பிடாரம் - 20
சாத்தான்குளம் - 34
ஸ்ரீவைகுண்டம் - 37
தூத்துக்குடி - 33.20
திருச்செந்தூர் - 38
விளாத்திகுளம் - 4.5
கயத்தாறு - 6
காயல்பட்டினம் - 38
குலசேகரன்பட்டினம்- 28
கீழஅரசடி - 4
எட்டயபுரம் - 4
கடம்பூர் - 21
மணியாச்சி - 65
வேடநத்தம் - 30
சூரங்குடி - 29
காடல்குடி - 5
வைப்பார் - 66
கழுகுமலை - 13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக