வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல்
அரசு மரியாதையுடன் அடக்கம்
அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி, 
அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது.
ராணுவவீரர்
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் முத்துசந்தனகுமார் (வயது 25). இவர் அசாமில் ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த 18–ந் தேதி அசாம் மாநிலம் திஸ்பூரில் ராணுவ லாரியை ஓட்டி சென்ற போது எதிரே வந்த லாரியும், முத்துசந்தனகுமார் ஓட்டிச் சென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முத்துசந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
அஞ்சலி
இதைத்தொடர்ந்து அவரது உடல் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கும், அங்கிருந்து மதுரைக்கும் கொண்டு வரப்பட்டது. மதுரையில் இருந்து ஆம்புலன்சு வாகனம் மூலம் சொந்த ஊரான பொட்டல்காடு கிராமத்துக்கு ராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். அங்கு முத்துசந்தனகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் ரவிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஷ், தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் நாகராஜன், தேசிய மாணவர் படை 29–ம் பிரிவை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அடக்கம்
தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள், 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 24 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மரியாதையுடன் முத்துசந்தனகுமார் உடல், அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...