செவ்வாய், 25 ஏப்ரல், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவல கங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தூத்துக்குடி, 

ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

பூட்டப்பட்ட அலுவலகங்கள்

இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட 8 தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடி கிடந்தன. கலெக்டர் அலுவலகத்தில் குறைந்த அளவு ஊழியர்கள் இருந்தனர். ஊழியர்கள் இல்லாததால் தாலுகா அலுவலக கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால், தாலுகா அலுவலகங்களில் பட்டா மாற்றம், மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கோவில்பட்டியில்...

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், கோவில்பட்டியிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 40 பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

போராட்டத்திற்கு வட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெகநாதன், இணை செயலாளர் சின்னதம்பி, தணிக்கையாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் 24 பெண்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...