செவ்வாய், 28 மார்ச், 2017

திருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் மிதந்ததால் பரபரப்பு

ருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் மிதந்ததால் பரபரப்பு

திருச்செந்தூர் கடலில் எண்ணெய்  படலம் மிதந்ததால் பரபரப்பு
திருச்செந்தூர் கடலில் எண்ணெய் படலம் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலையில் வழக்கம்போல் பக்தர்கள் புனித நீராடினர். அப்போது கடலில் ஆங்காங்கே கருப்பு நிறத்தில் எண்ணெய் படலம் மிதந்தவாறு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கடலில் குளிக்க தயங்கினர். சில பக்தர்கள் எண்ணெய் படலத்தை பொருட்படுத்தாமல் கடலில் குளித்தனர். பெரும்பாலான பக்தர்கள் கடலில் குளிக்காமல், கோவில் நாழிக்கிணற்றில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்தனர். கடலில் எண்ணெய் படலம் எவ்வாறு வந்தது? என்பது தெரியவில்லை.

மீன்களுக்கு பாதிப்பு?

நடுக்கடலில் சென்ற கப்பல் அல்லது விசைப்படகுகளில் இருந்து எண்ணெய், டீசல் போன்றவை கசிந்து வெளியேறி இருக்கலாம். அவை காற்றின் வேகத்தில் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரம் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அந்த ஆலைகளில் இருந்து ரசாயனம் கலந்த எண்ணெய் உள்ளிட்ட கழிவுநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது. 

கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை ஆய்வு செய்து அதனை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...