வியாழன், 25 மே, 2017

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்



தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் என்.பெரியசாமி. இவர்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை என்.பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

தட்டார் மடத்தை சேர்ந்த பெரியசாமி 30 ஆண்டுகளாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். நெருக்கடி நேரத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். மேலும் திமுக தலைவர் கலைஞரால் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர்.

என்.பெரியசாமி 1989, 1991 தேர்தல்களில் வெற்றி பெற்று தூத்துக்குடி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் 1996ல் நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் திமுகவின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகள் கீதாஜீவன் தற்போது தூத்துக்குடி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...