இன்று மதியம் ரமலான் விடுமுறைக்கு மணப்பாடு கடலில் குளிக்க குடும்பத்துடன் சென்ற அகமது சாலிக் (17), வர்சி அகமது (15) ஆகிய மாணவர்கள் கடலில் குளிக்கும் போது காணாமல் போன தகவல் அறிந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணாச்சி அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கழக செயல் தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் அறிவுரையின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். துரதிஷ்டவிதமாக அந்த இரண்டு மாணவர்களும் உயிர் இழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு திருசெந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து மாணவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலாக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உடன் உள்ளார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக