தூத்துக்குடி மாவட்டம் ஏரல் புதுமனை ஜிம்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோரத்துவ இணையம் சார்பில் ஏரல் புதுமனைதெருவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ரம்ஜான் சிறப்பு தொழுகை, இன்று காலை 8.40 மணிக்கு . இதனை ஜிம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மது உஸ்மான் அலி தொழுகை நடத்தினார். தொடர்ந்து குத்பா பேருரையினை நிகழ்த்தினார்.
இதில் ஜிம்ஆ பள்ளி வாசல் தலைவர் ,உஸ்மான் அலி செயலர் , துணை தலைவர் பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய சகோரத்துவ இணையம் உறுப்பினர்கள் ( Members of the Islamic Association of the Internet)
அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸ், அப்துல் பாரி,முகம்மது முஸ்தபா,ஹைஷர்&முஸ்தாக் காசிம்,முஹ்மத் மீரான்,முகமது அஸ்லம்,அன்வர் சதாத்,அம்ஜத் அகமத்,முகம்மது முஸ்தபா,முகம்மது ஷிஹாப்,சீராஜ் டீன்,சையத் அப்துல் கரீம் ,முகம்மது இத்ரிஸ்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு தொழுகையில் புத்தாடை அணிந்து 250 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்து கொண்டனர்.
---------- ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏ. கே ஷபிக் அகமத்----------



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக