வெள்ளி, 21 ஜூலை, 2017

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தொலை நிலை அஞ்சல் வழிச் சான்றிதழ் பயிற்சிகள் அறிமுகம்



                                                                           
     

 சென்னை ஜூலை 21 ;    
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகக் கல்விக் கழகம்  மக்களின் வாழ்வாதாரத்தை சுயவேலைவாய்ப்பின் மூலம் முன்னேற்றுவதற்காக தொலை நிலை அஞ்சல் வழிச் சான்றிதழ் பயிற்சிகள் அறிமுகப்படுத்தி உள்ளது.  இதற்காக வண்ண மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், நன்னீர் மீன் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள், வனாமி இறால் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள் போன்ற பயிற்சிகளுக்கு கட்டணம் ரூ.750/- மற்றும் மதிப்பூட்டிய மீன் உணவுகள் தயாரித்தல் மற்றும் அவற்றின் தரக்கட்டுப்பாடு போன்றவற்றிற்கு பயிற்சி கட்டணமாக ரூ.1000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களுக்கு : www.tnfu.ac.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.  இப்பயிற்சிக்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.08.2017,  இப்பயிற்சிகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :  இயக்குநர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக கல்விக் கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்,  தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகம், 2வது தளம், அசோக் நகர், சென்னை - 600 083.  தொலைபேசி. 044-2474 0748/44.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...